மற்றொரு "டான்சி" ஊழலுக்கு ஜெ. ரெடி: இளங்கோவன் அதிரடி குற்றச்சாட்டு
சென்னை:
டான்சி ஊழலைப் போலவே சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஒரு அலுவலகத்தைதனியாருக்குத் தாரை வார்க்க ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முயன்று வருவதாக தமிழக காங்கிரஸ்தலைவரான இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,சென்னை-கிண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இயந்திரப் பிரிவு கோட்ட அலுவலகம் இயங்கிவருகிறது.
இங்கு வாகனங்களை ரிப்பேர் செய்யவும் இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்காகவும் ஒரு பணிமனையும்செயல்பட்டு வருகிறது.
சுமார் 300 கிரவுண்டில் அமைந்துள்ள இந்த இடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.
இந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு முயற்சிசெய்து வருவதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் கூறியுள்ளனர்.
இதனால் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 420 பேர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை தனியாருக்கு விற்று ஊழல் செய்ததைப் போலவே அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தையும்தனியாருக்கு விற்று பெரும் ஊழலில் ஈடுபட அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று அவ்வறிக்கையில்இளங்கோவன் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications