கர்நாடக அணைகளில் கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து காவிரி கண்காணிப்புக் குழுவினர் நாளை ஆய்வுநடத்தவுள்ளனர்.

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தான் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கடந்த சனிக்கிழமை பிரதமர் வாஜ்பாயிடம் அம்மாநில முதல்வர் கிருஷ்ணாதெரிவித்தார்.

இதையடுத்து கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து மூன்று நாட்களுக்குள் அறிக்கைஅளிக்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய நீர்வளத்துறை செயலாளரான கோஸ்வாமி தலைமையிலான மூன்று பேர் கொண்ட காவிரிகண்காணிப்புக் குழு இன்று மாலை பெங்களூர் வந்து சேர்கிறது.

நாளை காலை தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் காவிரி கண்காணிப்புக்குழுவினர் விவாதிக்க உள்ளனர்.

பின்னர் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகளைஹெலிகாப்டர் மூலம் சென்று காவிரி கண்காணிப்புக் குழுவினர் நாளை பார்வையிடவுள்ளனர்.

இவர்களுடன் தமிழக மற்றும் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர்களும் சென்று நீர் இருப்பு குறித்து ஆய்வுநடத்தவுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் தமிழக அணைகளையும் பார்வையிட்ட பின்னர் பிரதமரிடம் அறிக்கை அளிக்கவுள்ளனர்.

கடந்த 3ம் தேதி அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் 8ம் தேதி வழங்கப்பட்ட காவிரி நதி நீர்ஆணையத்தின் உத்தரவு ஆகியவற்றுக்குப் பின்னர் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்குத் திறந்து விட்டுள்ள நீரின்அளவு குறித்து மத்திய அரசு வரும் 27ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக சட்டசபை நாளை அவசரமாகக் கூடுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+