பழிக்குப் பழி: மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையில் மாமூலைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டான்.
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவன் மலைச்சாமி. இவன் அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வந்தான்.
மாமூல் தொகை வசூலானதும் அந்தப் பணத்தை மலைச்சாமியும் அவனுடைய கூட்டாளிகளும் பங்கு போட்டுக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் பணத்தைப் பங்கு போடுவதில் மலைச்சாமிக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் இடையே பயங்கரத் தகராறு ஏற்பட்டது.
அப்போது பழனிச்சாமி என்ற ரவுடியை மலைச்சாமி கத்தியால் குத்திக் கொன்றான்.
இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் மலைச்சாமியைக் கொல்லத் திட்டமிட்டனர்.
நேற்று மலைச்சாமி தெப்பக்குளம் பகுதியில் தனியே சென்றபோது அவனை பழனிச்சாமியின் தந்தை, தாய் உள்பட 6 பேர் வழி மறித்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பியோடிய மலைச்சாமியை அவர்கள் விரட்டிச் சென்றனர். பின்னர் நடுரோட்டில் வைத்து அவனை மடக்கி சரமாறியாக வெட்டினர். இதில் மலைச்சாமி அந்த இடத்திலேய உயிரிழந்தான். பழனிச்சாமியின் தாயும் சேர்ந்து அவனை வெட்டியதாகத் தெரிகிறது. பின்னர் அந்தப் பெண்ணும் மற்ற 5 பேரும் தப்பியோடிவிட்டனர்.
நடுரோட்டில் பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை தெப்பகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிவிட்ட பழனிச்சாமியின் தாய், தந்தை உள்ளிட்ட ஆறு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் மாமூல் வசூலித்து வாழ்க்கை நடத்துவதில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு வேலையே அடுத்தவர்களிடம் பணம் பறிப்பது, கொள்ளை அடிப்பது தான்.
இதை இவர்கள் ஒரு நிரந்தரத் தொழிலாளகவே செய்து வருகின்றனர். இந்த மாமூல் பணத்தை வட்டிக்கு விட்டு பெரும் செல்வந்தரான ரெளடிகளும் உண்டு. இந்த வட்டித் தொழிலை ரவுடிகளின் வீட்டுப் பெண்கள் நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications