பிரேமானந்தா அப்பீல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
சென்னை:
பிரபல செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
திருச்சி அருகே உள்ள பாத்திமா நகரில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இங்கு பெண்கள்மட்டுமே அதிக அளவில் இருந்தனர்.
அவர்களில் 13 பேரை பிரேமானந்தா வற்புறுத்தி மானபங்கப்படுத்தி விட்டதாகவும், ரவி என்பவரை கொலைசெய்து ஆசிரமத்திற்குள்ளேயே புதைத்து விட்டதாகவும் பரபரப்பான புகார் எழுந்தது. தமிழகத்தையே உலுக்கியதுபிரேமானந்தா விவகாரம்.
இந்த வழக்கை புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பானுமதி விசாரித்து வந்தார். வழக்குவிசாரணையின் முடிவில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.66 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் ஜாமீன் மனு ஒன்றையும் பிரேமானந்தா தாக்கல்செய்தார். ஆனால் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி சண்முகம் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் இந்த மனு மீது விசாரணை நடத்துகிறார்கள்.
பிரேமானந்தா உள்பட 6 பேர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
-->
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications