பிரேமானந்தா அப்பீல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
சென்னை:
பிரபல செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
திருச்சி அருகே உள்ள பாத்திமா நகரில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இங்கு பெண்கள்மட்டுமே அதிக அளவில் இருந்தனர்.
அவர்களில் 13 பேரை பிரேமானந்தா வற்புறுத்தி மானபங்கப்படுத்தி விட்டதாகவும், ரவி என்பவரை கொலைசெய்து ஆசிரமத்திற்குள்ளேயே புதைத்து விட்டதாகவும் பரபரப்பான புகார் எழுந்தது. தமிழகத்தையே உலுக்கியதுபிரேமானந்தா விவகாரம்.
இந்த வழக்கை புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பானுமதி விசாரித்து வந்தார். வழக்குவிசாரணையின் முடிவில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.66 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் ஜாமீன் மனு ஒன்றையும் பிரேமானந்தா தாக்கல்செய்தார். ஆனால் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி சண்முகம் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் இந்த மனு மீது விசாரணை நடத்துகிறார்கள்.
பிரேமானந்தா உள்பட 6 பேர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications