ஆத்தூர் வெடிவிபத்து: உண்ணாவிரதம் இருப்போம்- திமுக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஆத்தூர் வெடிவிபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் திமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
ஆத்தூரில் வெடிவிபத்து நடந்த இடத்தை வீரபாண்டி ஆறுமுகம் நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்து குறித்த பின்னணியில் மர்மம் உள்ளது.அதை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது.
சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications