"எங்கள் மகனையா பிடித்து கொடுத்தீர்கள்?": மக்களை மிரட்டிய தீவிரவாதியின் பெற்றோர் கைது
திருச்சி:
என் மகனைப் பிடித்துக் கொடுத்த உங்களை சும்மா விட மாட்டோம் என்று தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச்சேர்ந்த சீதாராமனின் பெற்றோர் மிரட்டியதால், அவர்களை அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சியைச் சேர்ந்தபொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் பகுதியில் உள்ள முந்திரிக் காடுகளில், டாக்சி டிவைர்களைக் கடத்திக் கொன்று புதைத்து வைத்தசீதாராமன் போலீஸ் பிடியில் சிக்கினார்.
முந்திரிக் காடுகளில் தோண்ட தோண்ட பிணங்களாக வந்த வண்ணம் உள்ளன. 15 பேருக்கும் மேல் இவ்வாறுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகள்தொடர்பாக இதுவரை 10 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதாராமனை பிலாக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் தான் போலீஸுக்குக் காட்டிக் கொடுத்து விட்டதாக அவரது தந்தைகலியமூர்த்தியும் தாயாரும் பிலாக்குறிச்சி மக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிலாக்குறிச்சி மக்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்று,"எங்களைக் கொன்று விடுவதாக இவர்கள் மிரட்டுகிறார்கள். இதனால் எங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல்போய் விட்டது. எனவே நடவடிக்கை எடுக்கவும்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications