பாகிஸ்தான் மறுப்பு
இஸ்லாமாபாத்:
குஜராத் சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றஇந்தியாவின் குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்திய துணைப் பிரதமர் அத்வானி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சரான நிஸார் மேமன் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாகமறுத்தார். இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில்,
இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு மிகவும் முட்டாள்தனமானது. இதன்மூலம் இந்தியா சுயமாக யோசிக்கும்தன்மையை முழுவதுமாக இழந்துவிட்டது.
இந்தியாவில் எங்கு வன்முறை நடந்தாலும் அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறுவதையே இந்தியாவழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் அத்வானியும் இவ்வாறு பேசியுள்ளார்.
அத்வானியின் இந்தப் பேச்சு இந்துத்துவத் தீவிரவாதிகள் வன்முறையைத் தூண்டிவிடத் தான் வழி செய்யும். இதைஇந்திய அரசு தடுக்க வேண்டும் என்றார் நிஸார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகப் போராடும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கேலிக்குரிய கருத்தையும் அவர் அப்போது தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications