டெஹ்ரீக்-ஏ-கசாஸ் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்:
சுவாமி நாராயணன் கோவிலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் டெஹ்ரீக்-ஏ-கசாஸ் என்ற தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளின் உடல்களில் இருந்தும் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் இந்த விவரம்தெரிய வந்தது. இந்தக் கடிதங்கள் உருதுவில் எழுதப்பட்டிருந்தன.
குஜராத்தில் இருந்து கொண்டே இந்தத் தீவிரவாத அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளுக்கும் 22 முல் 25 வயது தான் இருக்கும் என்றும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 13 கிரனைட் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தற்கொலைப் படையைச் சேர்ந்ததீவிரவாதிகள்.
உணவுப் பொருள்களையும் இவர்கள் எடுத்து வந்திருந்தனர். மேலும் ஷேவ் செய்து கொண்டு மிக நீட்டாக இந்தத்தீவிரவாதிகள் வந்திருந்தனர்.
-->












Click it and Unblock the Notifications