டான்சி நிலத்தை ஒப்படைக்க தயார்: கோர்ட்டில் சசிகலா மனு
சென்னை:
டான்சி நிலத்தை மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்கத் தயார் என்று அந்நிலத்தை வாங்கியவரும முதல்வர்ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாவும் சசிகலாவும்பின்னர் உயர் நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம்சுவாமி ஆகியோர் அப்பீல் செய்த மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வேணுகோபால், டான்சி நிலத்தை அவர் திரும்பவும்அரசிடமே ஒப்படைப்பதற்குத் தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஇவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவைத் தவிர சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1993ம்ஆண்டே பாரதி மற்றொரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். டான்சி எல்லைக்கு உட்பட்ட நிலத்தை விற்றது சட்டவிரோதமானது என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் சசிகலா ஒருமனுவைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பகிரங்க ஏலம் மூலமாகத் தான் டான்சி நிலம் விற்பனைக்கு வந்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸின் நிர்வாக பங்குதாரர்என்ற முறையில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தானும் அந்த நிலத்தை வாங்கினேன். இதில் சட்ட மீறல்கள்எதுவும் இல்லை.
டான்சி நிலம் விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
அதே நேரத்தில் இந்த வழக்கின் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, வாங்கிய இரண்டுசொத்துக்களையும் நாங்கள் செலுத்திய பணத்தைக் கூட எதிர்பார்க்காமல் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்கத்தயாராக இருக்கிறேன்.
இந்நிலத்துடன் வாங்கிய மற்ற சொத்துக்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளேன்.
இது தொடர்பான வழக்குகளில் எந்த வகையான தீர்ப்பு வந்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் ஒப்படைக்கதயாராக உள்ளேன்.
எனவே டான்சி நிர்வாகத்தினர் நாங்கள் ஒப்படைக்கும் சொத்துக்களையும் நிலத்தையும் திரும்பவும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் சசிகலா கூறியுள்ளார்.
-->
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications