கன்னட நடிகர்கள் "உப்புத் துரோகிகள்": பாரதிராஜா கடும் தாக்கு
சென்னை:
தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என்று போராடிய கன்னட நடிகர்களுக்கு இயக்குனர்பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்கள்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது உப்புத் துரோம் என்றும் அவர் கூறினார்.
"என் இனிய தமிழ் மக்களே" என்ற தன்னுடைய வழக்கமான "டச்"சுடன் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 73 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமலேயே இழுத்தடிக்கப்படும் காவிரி நதிநீர் பிரச்சனை மூலம்ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்தாள நினைத்தார்கள். ஆனால் அவர்கள் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்பதில்ஒரு நியாயம் இருந்தது.
சுதந்திர இந்தியாவில் இப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டது. எதிர்ப்பு இயக்கங்களும், ஊர்வலங்களும்,தற்கொலைகளும் (தியாகம்?), அறிக்கைகளும் அமளிதுமளிப்படுத்துகின்றன.
இங்கிருந்து கர்நாடகம் போகும் பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள்தாக்கப்படுகின்றன.
தமிழ்க் கலைஞர்கள் கர்நாடகத்தில் நடத்தும் படப்பிடிப்புகளில் கலகம் நடக்கிறது என்றால், இரண்டும் அண்டைமாநிலங்களா அல்லது அண்டை நாடுகளா என்ற சந்தேகம் வருகிறது.
இனம், மொழி, தேசம் இவற்றையெல்லாம் கடந்து இருக்க வேண்டிய கலைஞர்கள், இத்தகைய பொதுப்பிரச்சனைகளில் பொறுப்பின்றி தலையிடுவதையும், இரட்டை வேடம் போடுவதையும் சகித்துக் கொள்ளவேமுடியாது.
அவர்கள் (கன்னட நடிகர்கள்) நடத்துவது போன்ற ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தத்தெரியாதவர்கள் தமிழ்த் திரையுலகில் இருக்கிறார்கள் என்றோ, தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றோ,எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றோ யாரும் கற்பனையோ, கனவோ காண்பது தவறானது.
இரு மாநிலங்களிலும் வாழும் இரு இன மக்களின் நலன், பொது நன்மை ஆகியவற்றைக் கருதித் தான்பொறுமையுடன் இருக்கிறோமே தவிர, எல்லாவற்றையும் "சகித்துக் கொள்கிற" எருமை மாட்டுத்தனம் தமிழனுக்குஇல்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவருடைய விடுதலைக்காக தமிழகமே பிரார்த்தனை செய்தது.ஆனால் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக்கூடாது என்கிற ஊர்வலத்திற்கு அவரே தலைமையேற்றார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் நான்கு மாநிலங்களுக்கும் பொதுவானது என்றுசொல்லப்படுகிற (ஆனால் உண்மையில் ஏமாற்றுகிற) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.சி.கவுடா இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்துள்ளார்.
தமிழகத்தில் "பிழைக்கலாம், தொழில் செய்யலாம், சொத்து சேர்க்கலாம், பதவிகள் வகிக்கலாம், எப்படிவேண்டுமானாலும் காலத்தைக் கழிக்கலாம்", பின்னர் உடனே விமானமேறி பெங்களூர் போய் "தமிழகத்திற்குத்தண்ணீர் தராதே" என்று இயக்கமும் நடத்தலாம் என்பது நாகரீகமற்ற நன்றி கெட்ட செயலாகக் கருதப்படும்.
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும், நீதிமன்றமும் ஏதாவது செய்து தொலைக்கட்டும். "உப்புத்துரோகம்" செய்கிறவர்கள் எந்த இனமாக இருந்தாலும் களையப்பட வேண்டிய விஷச் செடிகள்.
இனப்பற்று என்பது எல்லோருக்கும் தான் இருக்கிறது. தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை, உறங்கிக் கொண்டும்,சிதறுண்டும் கிடக்கிறார்கள் என்று நினைப்பவர்களின் கனவை எங்களால் எளிதாகக் கலைக்க முடியும்.
இங்கும் அங்குமாக இரட்டை வேடம் போடும் "உப்புத் துரோகிகளை"த்தான் முதலில் எச்சரிக்கிறோம்.
இந்த அறிக்கை இரட்டை வேடம் போடுபவர்களை எச்சரிப்பதற்காக மட்டுமல்ல. எந்த எதிர் வினையும் காட்டாமல்இருக்கும் (மெத்தனமாக இருப்பதாக மற்றவர்களால் கருதப்படுகிற) தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் என்னசெய்யப் போகிறார்கள்?
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்ன கருத்து இருக்கிறது? ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படத் தொழிலாளர்களுக்கு இதில் அக்கறை இருக்கிறதா?
தங்கள் நலன்களைப் புதிது புதிதாய் பெற இயலாது போனாலும், இருப்பதையும் தமிழன் இழக்காமல் இருக்கஎன்ன செய்யப் போகிறோம்?
நம்மை வாழ வைக்கும் தமிழர்களுக்கு நமது கைம்மாறு நன்றிக் கடன் என்ன?
சிந்தியுங்கள், ஏதாவது செய்யலாம், இணைந்து முன் வாருங்கள் என்று அவ்வறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.
-->
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications