குஜராத்: தீவிரவாதிகளை ஏற்றி வந்த டாக்சி டிரைவர் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்:

குஜராத் கோவிலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஏற்றி வந்த டாக்சி டிரைவர் பிடிபட்டார்.

இதற்கிடையே மத்திய உளவுப் பிரிவினரின் விசாரணையில் தாக்குதல் நடத்த வந்து சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில்ஒருவன் பாகிஸ்தானின் லாகூரையும் இன்னொருவன் கராச்சியையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

லாகூரைச் சேர்ந்தவன் பெயர் முகம்மத் அம்ஜத், கராச்சியின் அத்கோ பகுதியைச் சேர்ந்தன் பெயர் ஹபீஸ் யாசிர் என்றும்தெரியவந்துள்ளது.

காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து இவர்களை கோவிலுக்கு அழைத்து வந்த டிரைவரை மாநில போலீசார் இன்று கைதுசெய்தனர். இவரிடம் போலீசாரும் மத்திய உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த அன்று இரு தீவிரவாதிகளும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காந்திநகர் வந்திறங்கியது தெரிய வந்துள்ளது.

வெளியே வந்த இரு தீவிரவாதிகளும் இந்த டிரைவரின் அம்பாசிடர் காரில் ஏறி சத்தியநாராயணா கோவிலுக்குச் செல்லுமாறுகூறியுள்ளனர்.

இவர்கள் தீவிரவாதிகள் எனக்குத் தெரியாது என போலீசாரிடம் அந்த டிரைவர் கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+