வழிப்பறி கொள்ளை அடிக்கிறது ஜெ. அரசு: காங். தாக்கு
சென்னை:
மின்சாரக் கட்டணத்தை விரைவில் உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக மக்களிடம்வழிப்பறி கொள்ளை அடிக்கிறது என்று மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
முந்தைய அதிமுக ஆட்சியின் போது ரேஷன் அரிசியின் விலை கிலோவுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.ஆனால் இந்த விலை உயர்வுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தான் காரணம் என்று அவர் மீது பழிபோட்டார் ஜெயலலிதா.
பின்னர் அனைவரும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 25 காசுகள் வரை அரிசி விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் விவசாயிகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதனால் மக்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும் மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து பலஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழக காங்கிரஸ் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications