இமாம் அலி விவகாரத்தில் சிக்கப் போகும் திமுக பிரமுகர்
சென்னை:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் முக்கிய கூட்டாளி ஷாஜகான் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என்றுகருதப்படுவதால் அவனைப் பிடிக்கும் முயற்சியில் மாநகர போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இமாம் அலிக்கும், சென்னையில் உள்ள அவரதுகூட்டாளிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இமாம் அலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் சில சென்னை எண்கள் உள்ளன. எனவே இதுதொடர்பாக தீவிர விசாரணைநடந்து வருகிறது. சில சந்தேகப்படும்படியான நபர்கள் போலீசாரால் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பெங்களூரிலிருந்து தப்பிய இமாம் அலியின் கூட்டாளியான ஷாஜகான் சென்னையில் இருகலாம் என்ற சந்தேகத்தில் இங்கும்தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே இமாம் அலியிடம் பிடிபட்ட செல்போனில் மதுரை திமுக கவுன்சிலர் ஒருவரின் நம்பரும் இருப்பதாகத் தெரிகிறது. இவர்மதுரையில் பல தொழில்கள் செய்து வருபவர். மதுரையில் பல கடைகள் வைத்துள்ளார். இவரிடமும் விரைவில் விசாரணை நடக்கலாம்என்று தெரிகிறது.
இவரை வைத்து திமுகவையே இமாம் அலி விவகாரத்தில் தொடர்புபடுத்தி பிரச்சனையாக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications