"ஆத்தா காப்பாத்துவா": மதுரையில் 4 பேர் பரிதாப தற்கொலை
மதுரை:
அம்மன் தங்களைக் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தும்,தூக்கில் தொங்கியும் மதுரையில் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை பழைய மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்குஒரு ஆண்டுக்கு முன்தான் கல்யாணம் நடந்தது.
இவர்களுடன் ஹேமாவின் அண்ணன்களான இளங்கோவன், கலையரசன் ஆகியோரும் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு பத்திரகாளியம்மன் மீது அபார நம்பிக்கை இருந்தது. எப்போது பார்த்தாலும் பத்திரகாளியம்மனுக்குபூஜை செய்தவண்ணம் இருப்பார்கள். நம்மை அம்மா பார்த்துக் கொள்வாள், நமக்கு சாவே கிடையாது என்றுஅடிக்கடி கூறிக் கொள்வார்களாம்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய பத்திரகாளியம்மனுக்கு பூஜைசெய்துள்ளனர்.
புதன்கிழமை காலை வீரமணிகண்டனின் தந்தை ராஜு அவர்களுக்குப் போன் செய்துள்ளார். ஆனால் பதில் வராமல்போகவே அவர் நேராக வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ஹேமாவும், அவரது ஒரு சகோதரரும் தூக்கில்தொங்கியபடியும், வீரமணிகண்டனும், இன்னொருசகோதரரும் தரையில் விழுந்தபடி கிடந்ததையும் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஆண்டாள்புரம் போலீஸாருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர்.
இரண்டு பேர் தூக்கில் தொங்கியும், இரண்டு பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். அவர்களுக்குப் பக்கத்தில்பத்திரகாளியம்மன் படம், கேசரி, பாயசம் இருந்தன. பூஜை செய்ததற்கான அறிகுறிகளும் காணப்பட்டன.
இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே இந்த நான்கு பேரும் தற்கொலைக்கு முயன்றனர். தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு,சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து, எங்களை அம்மா காப்பாற்றி விட்டாள் பாருங்கள்என்று பக்கத்து வீடுகளில் கூறியுள்ளனர். அவர்களது அபார பக்தியே இப்போது அவர்களுடைய உயிரைப் பறித்துவிட்டது.












Click it and Unblock the Notifications