சரத் தலைமையில் நாளை அவசர கூட்டம்: விஜய்காந்த் எஸ்கேப்
சென்னை:
தமிழ் திரையுலகினர் நடத்தவுள்ள நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதுகுறித்து முக்கிய முடிவெடுப்பது குறித்து விவாதிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை மாலைநடக்கிறது.
இதுதொடர்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகள் நலனுக்காக உரிமைக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குநடிகர், நடிகையர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் கலந்து கொள்வர். இதுதொடர்பாக முக்கிய முடிவெடுப்பதற்காக நடிகர்சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை மாலை நடிகர் சங்கக் கட்டடத்தில் நடக்கிறது என்று கூறியுள்ளார் சரத்.
விஜய்காந்த் எஸ்கேப்??
ஆனால், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்கத்தின் தலைவரான விஜயகாந்த் லண்டன் சென்றுவிட்டார்.
அவரது பயணத் திட்டப்படி நெய்வேலி போராட்டம் எல்லாம் முடிந்த பின்னர் வரும் 15ம் தேதி தான் அவர்சென்னை திரும்புகிறார்.
இதனால் போராட்டத்தில் இருந்து அவர் எஸ்கேப் ஆகிவிடுவாாரா அல்லது போராட்ட தினத்தன்று தமிழகம்திரும்பி போராட்டத்தில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications