காங்கிரஸில் மேலும் ஒரு கட்சி இணைப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
முன்னாள் அதிமுக அமைச்சர் துரை. ராமாசாமி தனது மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னேற்றக் கழக கட்சியைகாங்கிரஸுடன் இணைத்து விட்டார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் துரை. ராமாசாமி.
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இவர் அதிமுகவிலிருந்து விலகி மக்கள் திலகம் எம்ஜிஆர்முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியைச் சந்தித்து தனது கட்சியை காங்கிரஸுடன்சேர்த்தார்.
இதற்கான அதிகாரப்பூர்வ விழா வெள்ளக்கோவிலில் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள்ரமேஷ் சென்னிதாலா, ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications