மும்பை தமிழ் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையைச் சேர்ந்த 47 தமிழ் வழிப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு 2,750 இலவசபுத்தகங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் ஏழை, மாணவ, மாணவியருக்கு இலவசமாகபுத்தகங்கள் வழங்குமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஜெயலலிதா ஏற்றார். அதன்படி மும்பை தமிழ் மாணவ, மாணவியருக்காக இலவசப்புத்தகங்களை வழங்கினார் அவர்.
மொத்தம் 47 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,750 புத்தகங்களை ஜெயலலிதா இலவசமாகவழங்கினார். அவற்றை மும்பையிலிருந்து வந்திருந்த பால் ஜெபாஸ்டியன் மற்றும் ராசகோபாலன் ஆகியோர்பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications