ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சான்றிதழ் தருவதற்காக ரூ.250 லஞ்சம் வாங்கிய 2 காவலர்களை லஞ்ச ஒழிப்புபோலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்பெறுவதற்கான அழைப்பு வந்திருந்தது.

இதையடுத்து சத்திரக்குடி காவல் நிலையத்திற்கு அவர் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக் காவலர்மைக்கேல் மற்றும் காவலர் மாரிமுத்து ஆகிய இருவரும் ரூ.250 கொடுத்தால் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறினர்.

பணம் எடுத்து வருவதாகக் கூறிய அந்த நபர் நேராக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சென்று புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ஆலோசனைப்படி மைக்கேல் மற்றும் மாரிமுத்துவிடம் அந்த நபர்ரூ.250 பணத்தைக் கொடுத்தார்.

வாய் நிறைய பல்லுடன் அந்தப் பணத்தை இரு காவலர்களும் வாங்கிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+