நோபல் பரிசுக்கு வாஜ்பாய் பெயர் பரிந்துரை
டெல்லி:
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு இந்த ஆண்டுஅமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று "சர்வதேச விழிப்புணர்வு மையம்" பரிந்துரைசெய்துள்ளது.
இது தொடர்பாக நோபல் பரிசு கமிட்டிக்கு "சர்வதேச விழிப்புணர்வு மைய"த்தின் தலைவரான மஜாஸ் முங்கேரிஅனுப்பியுள்ள கடிதத்தில்,
அமைதிக்கான நோபல் பரிசுக்காக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் தொடுத்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்மற்றும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் ஆகியோரின் பெயர்களை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர் தான் அவர்களும் பிற உலகநாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.
ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக வாஜ்பாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் எழுப்பி வருகிறார்என்பதால் அவருக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில்முங்கேரி குறிப்பிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications