கர்நாடகத்தை எதிர்த்து பெங்களூர் தமிழ் நடிகை குரல்
சென்னை:
கர்நாடகத்தின் போக்கு தவறானது. எனவே தமிழ்த் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த விஜயலட்சுமி பிறப்பால் ஒரு தமிழச்சி ஆவார். கர்நாடகத்திலேயே செட்டிலாகிவிட்டபோதிலும் இவரது வீட்டில் இன்னும் தமிழ் தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
"பிரண்ட்ஸ்" படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான விஜயலட்சுமி, கன்னடத் திரையுலகில்பிரபல நடிகையாவார். ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார், ராஜ்குமாரின் மருமகன் ராம்குமார் உள்ளிட்டவர்களுடன்இணைந்து நடித்துள்ளார்.
கன்னடத்தில் சிறந்த நடிகை விருது பெற்றவர். சென்னை கலாஷேத்ராவில் ருக்மணி தேவி அருண்டேலிடம் பரதம்கற்றவர்.
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெவித்துள்ளார்விஜயலட்சுமி.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் போக்கு தவறானது, அவர்களது பிடிவாதம் தேவையற்றது என்று கூறும்விஜயலட்சுமி நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்றார்.
பெங்களூரில் குடும்பம் இருந்தாலும், கன்னடர்களால் பிரச்சினை வரும் என்ற நிலையிலும், தமிழகத்தின் பக்கம்உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு குரல் கொடுத்துள்ள விஜயலட்சுமியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஒரு நடிகைக்கு உள்ள இந்த தைரியம், தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்களுக்கு இல்லையேஎன்பது தான் நெருடலாக உள்ளது.












Click it and Unblock the Notifications