காவிரி: ஜெ. தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் கர்நாடக அரசுமீறியுள்ளதைத் தொடர்ந்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகதமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயசங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
கர்நாடக அரசுக்கு எதிரான முக்கியத் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்ததிமுக இன்றை கூட்டத்திலாவது கலந்து கொள்ளுமா என்பது பற்றித் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை விட்டஜெயலலிதா, அம்மாநில அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரும் என்றும்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications