சொத்துக்காக தாத்தா, பாட்டியை வெட்டிக் கொன்ற இளைஞர்
சென்னை:
சென்னையில் தன் பெயரில் சொத்துக்களை எழுதித் தர மறுத்த தாத்தாவையும் பாட்டியையும் வெட்டிக் கொலைசெய்த ஒரு இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுடைய பேரன்கிருஷ்ணகுமார்.
சுப்ரமணியனின் சொத்துக்கள் தனக்குத் தான் சேர வேண்டும் என்றும் எனவே சொத்துக்களை தனது பெயரில்எழுதிக் கொடுக்குமாறு கிருஷ்ணகுமார் தன் தாத்தா, பாட்டியிடம் கேட்டு வந்தார்.
ஆனால் அதற்கு சுப்ரமணியனும், ராஜம்மாளும் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. கிருஷ்ணகுமாரின் சித்தப்பாகேசவனும் சொத்துக்களை அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று சுப்ரமணியனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், நேற்று வீட்டில் இருந்த சுப்ரமணியன் மற்றும் ராஜம்மாளைஅரிவாளால் சரமாரியாக வெட்டினார். அப்போது வீட்டுக்கு வந்த கேசவனையும் வெட்டினார்.
படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியனும், ராஜம்மாளும் இறந்தனர். கேசவனுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமாரை ராயபுரம் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications