ரஜினி வீடு முன் தர்ணா: மாணவர்கள் திட்டம்
சென்னை:
ரஜினி காந்த் வீடு முன் தர்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிராட்வேயில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில்சென்று மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான புக்கிங் மையத்திற்கு சென்று அங்கு கன்னடத்தில்எழுதப்பட்டிருந்த போர்டுகளை உடைத்து எறிந்தனர். பஸ்களையும் தாக்க முயன்றனர். ஆனால் போலீஸாரும் தமிழகபோக்குவரத்துத்துறை ஊழியர்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மாணவர்கள் கூறுகையில், நெய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்துகொள்ளாவிட்டால், இமயமலையிலேயே அவர் தங்கிக் கொள்ளட்டும், இல்லாவிட்டால் கர்நாடகத்திற்கு சென்று விடட்டும்.
சென்னைக்கு வந்தால் அவரது வீடு முன் அணிதிரண்டு சென்று தர்ணாப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.