For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் தனியார் கேடரிங் கல்லூரியில் பயின்று வந்த இரு மாணவர்கள் குவாரி பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி இறந்தர்.

திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் படித்து ராஜகோபால், நிஜாமுதீன் ஆகிய இருவரும் நேற்று மாலை ஆலம்பட்டியில் உள்ளகுவாரிக்கு சென்றனர்.

அங்கு கிரானைட் எடுப்பதற்காக மலைகள் உடைக்கப்பட்டு பெரிய பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஊறும் நீரினால்அந்த பள்ளங்கள் சிறிய கண்மாய்கள் போல் உள்ளன.

இருவரும் இதில் குளித்துக் கொண்டிருந்தபோது நீருக்கு அடியில் உள்ள பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதில்இருவருமே நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர்.

இவர்களின் ராஜகோபாலின் உடல் மீட்கப்பட்டுவிட்டது. ஆனால், நிஜாமுதீனின் உடல் இன்னும் பாறைகளுக்கு இடையே சிக்கிமூழ்கிக் கிடக்கிறது. இவரது உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X