பாரதிராஜாவுக்கு வைகோ ஆதரவு தந்தி
சென்னை:
தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜாமற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தந்திஅனுப்பியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையிலுள்ள வைகோ நேற்று அனுப்பியுள்ள இந்தத் தந்தியில்,
காவிரிப் பிரச்சனைக்காக கலைத் துறையினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளதை முழு மன மகிழ்ச்சியோடுவரவேற்கிறேன்.
இந்த முடிவு தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.
போராட்டம் வெற்றிகரமாக நடைபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் வைகோ.
இதற்கிடையே வைகோ இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் கலவரத்தின் போது அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குசம்பந்தமாகத் தான் அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்காக நேற்றே அவர் வேலூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று காலைமயிலாடுதுறை கொண்டு செல்லப்படுகிறார்.