ரஜினியை இழுக்கும் முயற்சியில் விஜய்காந்த்
சென்னை:
திரைப்பட உலகத்தினர் நடத்தும் போராட்டத்தில் ரஜினி நிச்சயம் பங்கேற்பார். எனவே, அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்என விஜய்காந்த் கூறியுள்ளார்.
இப்போது லண்டனில் உள்ள விஜய்காந்த் ரிஷிகேஷில் உள்ள ரஜினியிடம் பேசியதாகவும் அப்போது போராட்டத்தில்பங்கேற்குமாறு ரஜினியை அவர் நிர்பந்தித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்க வந்துவிடுகிறேன் என்று விஜய்காந்திடம் ரஜினி உறுதி மொழி தந்துள்ளதாகத் தெரிகிறது.
இத் தகவலை விஜய்காந்தே நடிகர் சரத் குமாரிடம் தொலைபேசியில் தெரிவித்தாக சரத்குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவித்தன.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து 11ம் தேதிக்கு முன்னதாகவே சென்னை திரும்பிவிடுவதாகவும்சரத்குமாரிடம் விஜய்காந்த் உறுதியளித்தார்.
போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்அறிவித்துள்ளதால் லண்டனுக்கு ஓடிய விஜய்காந்த் திரும்பி வருகிறார். கையோடு எப்படியாவது ரஜினியையும் இழுத்து வரும்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications