சென்னையில் வீட்டின் மேல் கூரை இடிந்து கொத்தனார் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் ஒரு கொத்தனார்பலியானார்.
கொருக்குப்பேட்டையில் உள்ள கிராமணி தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது.
மேல் கூரை போடும் பணி முடிந்து, அதில் உள்ள கட்டைகளை நீக்கும் வேலையில் பூபாலன் மற்றும் தங்கராஜ்ஆகிய இரு கொத்தனார்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பார விதமாக கான்க்ரீட் கூரை இடிந்துவிழுந்தது.
இதில் தங்கராஜ் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.
பூபாலனின் கால்கள் நசுங்கின. அவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications