""பெங்களூரில் மொழிக் கலவரத்தை தூண்ட கன்னட சங்கங்கள் சதி""

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழ்த் தாய் உருவபொம்மை எரித்தல், தமிழ் நாளிதழ்களைக் கொளுத்துதல், தமிழ் சேனல்களை நிறுத்துதல்ஆகியவற்றின் மூலம் மொழிக் கலவரத்தைத் தூண்ட கன்னட சங்கங்கள் சதி செய்வதாக பெங்களூர் தமிழ்ச் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் தாமோதரன் ஆகியோர்விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்த் தாயின் உருவபொம்மையைக் கொளுத்துவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தத் தீயசெயலை கர்நாடக அரசு தடுக்க வேண்டும்.

தமிழ்த் தாயின் உருவ பொம்மையை எரிப்பது தன் தாயையே தீயிட்டுக் கொளுத்தும் மகா பாவமாகும்.தமிழர்களையும், தமிழையும் இழிவுபடுத்திப் பேசியே அறுவடை செய்யும் அரசியல்வாதிகளைக் கடவுள் தான்தண்டிக்க வேண்டும்.

தமிழ்ப் பத்திரிக்கைகளைக் கட்டுக் கட்டாகக் கொளுத்துவதும், தமிழ் நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்என்ற மிரட்டுவதும் சிறுபிள்ளைத் தனமாகும். கர்நாடகத்தில் அரசு செயலற்றுப் போய்விட்டது என்பதையே இதுகாட்டுகிறது.

சில கன்னட அமைப்புகளின் வற்புறுத்தலின் பேரில் தான் கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சரியா, தவறா என்று கர்நாடக அரசும் காவல்துறையும் எண்ணவேண்டாமா?

இந்த விஷயத்தில் கூட அரசும் காவல்துறையும் தலையிடவில்லையென்றால் "தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்றநிலை தான் ஏற்படும்.

தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் வீணாகத் தமிழர்களையும்கன்னடர்களையும் பலிகடா ஆக்க வேண்டாம்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கட்டணம் செலுத்துவது பற்றி மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். எனவேஇவ்விஷயத்தில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+