முன்னாள் அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஓஸ்லோ:
உலக அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு வழங்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு சர்வதேச விவகாரங்களில் ஜிம்மி கார்ட்டர் தலையிட்டு அமைதித் தீர்வு கண்டு வந்துள்ளார்.உலகில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமூக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகிய பணிகளில் ஜிம்மி கார்ட்டரின்சேவையை பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுடன் 1.07 மில்லியன் டாலர் தொகையும் கார்ட்டருக்கு வழங்கப்படும். டிசம்பர் 10ம் தேதி நார்வே தலைநகர்ஓஸ்லோவில் இந்த விருது வழங்கப்படும்.
உலக அமைதிக்கான நோபல் பரிசை பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதுநினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications