Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் அடுத்த ஆட்சி: காங். செயற்குழு கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு இன்று இரவு கூடுகிறது.

காஷ்மீரில் தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. 25 ஆண்டுகளாகஆட்சியில் இருந்த அவரது கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

87 பேர் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 இடங்களை வென்று தனிப் பெரும்கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருந்தாலும் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மை இல்லை.

இதனால் 21 இடங்களில் வென்றுள்ள காங்கிரசும், 15 இடங்களில் வென்றுள்ள காங்கிரசில் இருந்து பிரிந்த முப்தி முகம்மத் சயீத்மற்றும் அவரது மகள் மெஹ்பூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க உள்ளன. இந்தஇருவரும் சேர்ந்தாலும் 36 இடங்கள் தான் உள்ளன.

பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிட், ஜம்மூ-காஷ்மீர் மக்கள் கட்சி ஆகியவை காங்கிரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன.

இதனால் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. யாரை முதல்வராக்குவது, துணை முதல்வர்பதவியை மெஹ்பூபாவுக்கு வழங்குவது ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ்செயற்குழு இன்று இரவு கூடுகிறது.

காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத்தைத் தான் முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தி காங்கிரஸ் போட்டியிட்டது.இந்த வெற்றி காங்கிரசே எதிர்பார்த்திராத ஒரு வெற்றியாகும்.

கடந்த தேர்தலில் 8 இடங்களில் வென்ற பா.ஜ.கவுக்கு இப்போது ஒரு இடத்தில் தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு உள்ளூர் கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என பா.ஜ.க. கூறுகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+