நவம்பர் முதல் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்திலிருந்து தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள்போக்குவரத்துதொடங்கும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சரக்கு கிட்டங்கி உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிவிட்டது.
நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று உறுதியாகக்கூறிக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications