இதே பாரதிராஜா தான் முன்பு என்னை புகழ்ந்தார்: கருணாநிதி
சென்னை:
என்னை இப்போது விமர்சிக்கும் இதே பாரதிராஜா தான் நான் முதல்வராக இருந்தபோது என்னைப் புகழ்ந்தார் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
நேற்று ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாரதிராஜா, கருணாநிதியா? அது யார்? அவரை நான் ஏன் சந்திக்க வேண்டும்என்று கேட்டிருந்தார்.
இது குறித்து இன்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,
இப்போது நான் யார் என்று கேட்கிறார். இதே பாரதிராஜா தான் நான் முதல்வராக இருந்தபோது பொது மேடையில் வைத்துவாயாரப் புகழ்ந்தார். பரிசும் கொடுத்தார் என்றார்.
பரமசிவன் கழுத்து பாம்பு: டி.ஆர்.
இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த பாரதிராஜாவை, டி.ராஜேந்தர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இன்று நெய்வேலி செல்ல நடிகர் சங்கம் வரை வந்த டி.ராஜேந்தர் பாதியிலேயே திரும்பிச் சென்றார். பின்னர் அவர் வெளியிட்டஅறிக்கையில்,
கலைஞரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நான் நடிகர் சங்கம் சென்றேன். ஆனால், அங்கு பஸ்கள் புறப்படுவதற்கான அறிகுறியேஇல்லை. காத்திருந்த திமுக நடிகர்களாக எங்களை வேண்டா வெறுப்பாக சிலர் பார்த்தனர்.
அழையா விருந்தாளி நிலைமையில் இருந்த நான், சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர் ஆகியோர் உள்ளம் புழுங்கினோம்.ஆனாலும் பொறுமை காத்து நின்றோம். அப்போது தான் கலைஞரை யார் அவர்? என்று கேட்டு பாரதிராஜா பேசிய செய்தியைபடிக்க நேர்ந்தது.
இதனால் நான் மேற்கொண்டு அவர்களுடன் சேர்ந்து போக விரும்பாமல் அதே நேரத்தில் அங்கே சலசலப்பையும் ஏற்படுத்தாமல்அமைதியாக திரும்பிவிட்டேன்.
கலைஞரைப் பார்த்து யார் இவர் என்று கேட்கும் பாரதிராஜா, அவர் முதல்வராக இருந்தபோது எத்தனை முறை போய் சந்தித்தார்என்பது உலகறியும். அப்போது கலைஞர் யார் என்று இவருக்குத் தெரியவில்லையா?
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா என்ற வரிகள் தான் பாரதிராஜாவைப் பார்த்தால் எனக்குநினைவுக்கு வருகிறது.
இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால், பின்னர் தானாக தனியே நெய்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications