For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரதத்தை முடித்தார் ரஜினி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மேற்கொண்டிருந்தஉண்ணாவிரதப் போராட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் மாலை 5 மணியுடன் முடித்துக் கொண்டார்.

ஒரு சிறுமி கொடுத்த பழச்சாற்றை அருந்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை ரஜினி நிறைவு செய்தார். அதன் பின்னர்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு உதவிய என்னுடைய ரசிகர்களுக்கும், நடிகர்,நடிகைகளுக்கும், திரையுலகினருக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும், வாழ்த்துக் கூறியஅனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மூத்த தலைவரான திமுக தலைவர் கருணாநிதியும் இந்த உண்ணாவிரத மேடைக்கு வருவதாகஅறிவித்திருந்தார். ஆனால் நான் தான் அவரை வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.

ஆனால் அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் என்னுடைய அன்பானநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் மிகவும் நன்றி.

இந்த உண்ணாவிரதத்தின் வெற்றி கர்நாடக அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதை கர்நாடக அரசுஉடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

எனவே என்ன செய்வார்களோ, ஏது செய்வார்களோ எனக்குத் தெரியாது. உடனடியாக தமிழகத்திற்கு காவிரியில்கர்நாடக அரசு நீரைத் திறந்து விட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் படி கர்நாடக அரசை மத்திய அரசும் வலியுறுத்த வேண்டும்.

இது தொடர்பான ஒரு மனுவை தமிழக ஆளுநரிடம் கொடுப்பதற்காகத் தான் நான் இப்போது ஆளுநர்மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்றார் ரஜினி.

இவ்வாறு நிருபர்களிடம் கூறிய ரஜினி உடனடியாகக் காரில் ஏறி ராஜ் பவனை நோக்கிப் புறப்பட்டார். ஆளுநர்பி.எஸ். ராமமோகன் ராவ் ஊரில் இல்லாததால், அவருடைய செயலாளரிடம் ரஜினி மனுவைக் கொடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X