திண்டுக்கல் அருகே 2 லாரிகள் மோதல்: 2 டிரைவர்களும் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே இன்று காலை 2 லாரிகள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் அவற்றின் டிரைவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மண்டபம் என்ற இடத்தில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த லாரியுடன் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் டிரைவர்களுமே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications