பெங்களூரில் தமிழ் பத்திரிக்கைகள் எரிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் பத்திரிக்கை ஏஜென்டுகளே தமிழ்ப் பத்திரிக்கைகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக விவசாயிகளுக்கு ஆதராவாக பல கன்னட அமைப்புகளும் பெங்களூரில் தமிழகத்திற்கு எதிராகப்போராட்டம் நடத்தி வருகின்றன.
சமீபத்தில் இந்த அமைப்புகள் தமிழ்ப் பத்திரிக்கைகளை எரித்துப் போராட்டம் நடத்தின. தமிழ்ப்பத்திரிக்கைகளை விற்கக் கூடாது என்றும் பத்திரிக்கை விற்பனையாளர்களிடமும் ஏஜென்டுகளிடமும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கை ஏஜென்டுகளும் கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழ்ப் பத்திரிக்கைகளை எரிக்கும் போராட்டம் நடத்தினர்.
மல்லேஸ்வரம் சர்க்கிள் அருகே கூடிய அவர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த தமிழ் செய்தித் தாள்கள் மற்றும்புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தினர். வேறு சில இடங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர்.
இனிமேல் தமிழ்ப் பத்திரிக்கைகளை விற்க மாட்டோம் என்றும் அப்போது அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications