கன்னட நடிகர்களுக்கு தடை விதிக்க திட்டம்?
சென்னை:
பெங்களூரில் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழ் சினிமாவில்நடித்து வரும் கன்னட மொழி நடிகர்களுக்கு தடை விதிப்பது குறித்து கோடம்பாக்கத்தில் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
காவிரிப் பிரச்சினையைக் காரணம் காட்டி கன்னட வெறியர்களின் பயமுறுத்தல் காரணமாக பெங்களூர், மைசூர்உள்ளிட்ட கர்நாடகம் முழுவதிலும் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ் டி.வி.சேனல்களும் ஒளிபரப்பாகவில்லை.
கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்குப் பதிலடி நடவடிக்கையில் இறங்க தமிழ்திரையுலகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, தமிழ் சினிமாவில் நடித்து வரும் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர்களான அர்ஜூன்,பிரபுதேவா, முரளி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ்திரையுலகின் முக்கியப் புள்ளிகள் ரகசியமாக ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இதுதொடர்பாக பேசி வருவதாகத்தெரிகிறது. தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் ரஜினியின் பெயரையும் சேர்க்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவேறு கருத்துக்கள் இருப்பதால் திரையுலகினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும்தெரிகிறது.
கன்னட நடிகர்களை அனுமதிப்பதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும், நெய்வேலி பேரணியில்கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு ரஜினியின் உண்ணாவிரத்தில் காலை முதல் மாலை வரை அமர்ந்தநடிகர்கள் பிரகாஷ் ராஜ், அப்பாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில தயாரிப்பாளர்கள்வற்புறுத்தியுள்ளனராம். அவர்களிடம் நிெய்வேலி போராட்டத்திற்கு வராத காரணத்தைக் கேட்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் இனி கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களை தமிழ் சினிமாவில்அறிமுகப்படுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் பல குழப்பங்கள் வெடிக்கப் போவது நிச்சயம்












Click it and Unblock the Notifications