For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக ஆளுநருடன் நாகப்பா மனைவி சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா அம்மாநில ஆளுநர்சதுர்வேதியை சந்தித்து தன் கணவரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.

தசரா ஊர்வலத்தை துவக்கி வைப்பதற்காக மைசூர் வந்திருந்தார் சதுர்வேதி. இதையடுத்து பரிமளா, அவருடையமகன் பிரீதம் மற்றும் மருமகன் கிரண் படேல், கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் பொன்னச்சிமகாதேவசாமி ஆகியோர் அவரை நேரில் சந்தித்தனர்.

அப்போது ஆளுநரிடம் பரிமளா ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தார். அம்மனுவில்,

என் கணவர் கடத்தப்பட்டு 52 நாட்கள் ஆகிவிட்டன. மேலும் தன் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அவரைக்கொன்று விடுவேன் என்றும் சமீபத்தில் வீரப்பன் கேசட் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான்.

இருந்தாலும் என் கணவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதையும் கர்நாடக அரசு எடுத்தது போலத்தெரியவில்லை.

இதனால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டுஅவரை மீட்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் பரிமளா கூறியிருந்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், நாகப்பாவை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்அரசு மேற்கொண்டு வருகிறது. நானும் வலியுறுத்துகிறேன் என்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X