தமிழகம்-கர்நாடகம் இடையே ரயில், பஸ் போக்குவரத்து சீரானது
பெங்களூர்:
காவிரி விவகாரம் காரணமாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்மற்றும் பஸ் போக்குவரத்துக்கள் தற்போது முழுவதுமாகச் சீரடைந்துள்ளன.
தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு நீர் கூடத் தரக் கூடாது என்று கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில்அம்மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ரயில் மறியல் போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். டெல்லிக்குச்சென்று கொண்டிருந்த ஒரு ரயில் என்ஜினையும் தீவைத்து அவர்கள் கொளுத்தினார்கள்.
மேலும் பெங்களூர்-மைசூர் இடையே பல இடங்களில் ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்தியுமிருந்தனர்.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் பெங்களூருடன் நிறுத்தப்பட்டன.சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டன.
இதனால் தமிழகத்திலிருந்து மைசூர் செல்ல வேண்டிய ஏராளமான தமிழர்கள் அவஸ்தைக்குள்ளாயினர். கடந்த 15நாட்களாக இதே அவஸ்தை தான்.
இந்நிலையில் நேற்று முதல் பெங்களூர்-மைசூர் இடையிலான ரயில் போக்குவரத்து சீரடைந்தது. தமிழகத்திலிருந்துமைசூர் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் எந்தவிதமான தடையும் இல்லாமல் சென்று சேர்ந்தன.
அதேபோல் கடந்த 13ம் தேதியிலிருந்து தான் பஸ் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு வந்தது.
கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்திலிருந்து யோசித்து யோசித்து தான் பஸ்கள் பெங்களூருக்கும் மற்ற கர்நாடகப்பகுதிகளுக்கும் சென்று கொண்டிருந்தன. தனியார் பஸ்கள் கூட அவ்வளவாக இயக்கப்படவில்லை.
மேலும் கடந்த 12ம் தேதி நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அன்றுமுழுவதுமே தமிழகத்திலிருந்து எந்த பஸ்சும் கர்நாடகத்திற்கு இயக்கப்படவில்லை.
பின்னர் 13ம் தேதி தமிழகம்-கர்நாடகம் இடையே ஓரளவு பஸ்கள் ஓடின. இதையடுத்து 14ம் தேதி முதல் பஸ்போக்குவரத்து மேலும் சீரடைந்தது. தற்போது அனைத்து இரு மாநிலங்களுக்கும் இடையே எந்தவிதமான தடையும்இல்லாமல் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
இதற்கிடையே ஈரோடு-மைசூர் இடையிலான பஸ் போக்குவரத்தும் இன்று காலை முதல் வழக்கம் போல்நடைபெறுகிறது. ஆனாலும் தனியார் வாகனங்களும் பஸ்களும் மட்டுமே ஓட ஆரம்பித்துள்ளன. இந்தப்பாதையில் அரசு பஸ்கள் வரும் 18ம் தேதி முதல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.