முரசொலி மாறன் கவலைக்கிடம்
சென்னை:
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாகஅப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூலை மாதம் மாறனுக்கு டெல்லியில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருடையஇருதயத்தில் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது.
அந்த செயற்கை வால்வில் பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அவருடைய உடல்நிலை மிகவும்பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் அவருடைய இருதயத்தில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை வால்வை எடுத்துவிட்டு வேறுஒரு புதிய செயற்கை வால்வை ஆபரேஷன் செய்து டாக்டர்கள் பொருத்தினர். சென்னை அப்பல்லோமருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
அதற்குள்ளாக மாறனின் ரத்த ஓட்டத்திலும் பூஞ்சை அதிக அளவில் கலந்து விட்டதால் அவருக்கு அதிகமானகாய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய நுரையீரல், சிறுநீரகம் ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து "மார்ஸ்" எனப்படும் சிறுநீரகச் சுத்திகரிப்பு கருவியைப் பயன்படுத்தி மாறனின் சிறுநீரகம்சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து மருத்துவஆலோசனைகள் பெறப்பட்டு மாறனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளாக அப்பல்லோமருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாறனுக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மருத்துவமனையின்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறனின் உடல் நிலை குறித்து பிரதமர் வாஜ்பாய் டெலிபோன் மூலம் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர்டாக்டர் பி.சி. ரெட்டியிடம் விசாரித்தார். மத்திய நலத்துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹாவும் மாறனின் உடல் நிலைகுறித்து விசாரித்தார்.