For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் "கிடுகிடு" உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும்அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளன.

எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அமெரிக்கா போர் தொடுக்கலாம் என்றசூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலைகள் மளமளவென்று உயரத் தொடங்கியுள்ளன.இதனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துகொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட இவற்றின் விலைகள் ஒரு லிட்டருக்கு 25 பைசா வரை உயர்ந்தன.

இந்நிலையில் இந்திய அரசுக்குச் சொந்தமான பல எண்ணெய் கம்பெனிகள் நேற்றும் பெட்ரோல், டீசல் விலைகளைஉயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலைகள் 33 பைசா முதல் 53 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளன. டீசல் விலைகள் 32பைசா முதல் 57 பைசா வரை உயர்ந்துள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.32.42லிருந்து ரூ.32.77ஆகவும், ஒரு லிட்டர்டீசலின் விலை ரூ.20.81லிருந்து ரூ.21.16ஆகவும் உயர்ந்துள்ளன.

டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.29.91லிருந்து ரூ.30.24ஆகவும், டீசலின் விலை ரூ.18.91லிருந்துரூ.19.23ஆகவும் அதிகரித்துள்ளன.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X