7,500 அடி உயரத்தில் இயங்கும் நீராவி என்ஜின்: திருச்சி தொழிற்சாலை சாதனை
திருச்சி:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையில் செல்லும் சக்தி மிக்க நவீன நீராவிஎன்ஜின்களை திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
இதில் நிலக்கரிக்குப் பதிலாக ஹை-ஸ்பீட் டீசல் பயன்படுத்தப்பட உள்ளது.
நீராவி என்ஜின்கள் படிப்படியாக இந்திய ரயில்வேயால் அகற்றப்பட்டு வந்தாலும் டார்ஜிலிங் போன்ற சுற்றுலா பகுதிகளில்பயணிகளைக் கவரும் வகையில் நீராவி என்ஜின்களையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டார்ஜிலிங்-ஹிமாச்சல் ரயில்வேயின் சார்பில் இயக்கப்படும் ரயில்கள் தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் இயக்கப்படும்ரயில்களாகும். வெறும் இரண்டடி அகலம் கொண்ட ரயில் பாதையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நீராவி என்ஜின்களில் பயணிப்பதை வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் விரும்புவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன என்ஜின்கள் தயாரிக்கும் பொறுப்பு திருச்சி ரயில் தொழிற்சாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த டிராக்குகளில் நிலக்கரிக்குப் பதிலாக ஹை-ஸ்பீட் டீசல் எண்ணெயால் இயங்கும் நீராவி என்ஜினை திருச்சிபொன்மலை ரயில்வே தொழிற்சாலை வடிவமைத்துள்ளது. இந்த என்ஜினின் அகலமும் மிகக் குறுகியது. இரண்டடி அகலபாதையில் செல்லும் வகையிலானது.
இது போன்ற 3 என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் திருச்சி ரயில்வே தொழிற்சாலையின் துணை தலைமைப் பொறியாளர்நாகராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு என்ஜினும் ரூ. 1.5 கோடி மதிப்பிலானவை. ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நீராவியை இந்த என்ஜின்கள் உற்பத்திசெய்யும்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து கும் என்ற இடம் வரை அமைந்துள்ள ரயில் பாதை கடல் மட்டத்தில் இருந்து7,407 அடி உயரத்தில் உள்ளது. இந்த பயங்கரமான உயரத்தில், பனிப் பொழிவுகளையும் மீறி இந்த நீராவி ரயில் என்ஜின்இயங்கியாக வேண்டும்.












Click it and Unblock the Notifications