"தமிழகத்தில் ரசிகர் மன்றமே இருக்கக் கூடாது": ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் ஒரு நடிகருக்கும் ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய இளைஞர் சங்கத்தின் மாநாடுநடந்தது. அதில் பேசிய ராமதாஸ், நடிகர்களை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில்,
ரசிகர் மன்றங்கள் இன்று நேற்றல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை சீரழித்து வருகின்றன.
எனவே இந்த மன்றங்களை உடனடியாக கலைக்க வேண்டும். இது நமக்குத் தேவையே இல்லை.
நல்லவற்றை ரசிப்போம். ஆனால் அதற்காக ரசிகர் மன்றங்களை வைத்து, நடிகனுக்கு பூஜை செய்து, சூடம் காட்டிநம்மை நாமே முட்டாள் என்று பறைசாற்றிக் கொள்ள வேண்டுமா?
ரசிகர் மன்றங்களால் வீணடிக்கப்பட்டு வரும் இளைஞர்களின் சக்தியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சினிமாவால் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தான் நமது இளைஞர்கள்கற்றுக் கொண்டுள்ளனர்.
காவிரி நமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம். நதி நீர்ப் பிரச்சினையை தீர்க்க நதிகளைதேசியமயமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக கூறி வருகிறது. இது ஒன்று தான் நிரந்தரத்தீர்வாகஇருக்க முடியும் என்றார் ராமதாஸ்.
பின்னர் வன்னிய இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து நடைமுறைகள் குறித்தும் அந்த மாநாட்டில்ராமதாஸ் அறிவித்தார். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.