தமிழக மக்களின் நலனுக்காகவே மதமாற்ற தடை சட்டம்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக மக்களின் நலனுக்காகத் தான் மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
டெல்லியில் இன்று நடந்த மாநில முதல்வர்களின் மாநாடு முடிந்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
ஏழை மக்களுக்கு பணத்தாசை காட்டி ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை கொடுத்து அவர்களை சிலர் மதமாற்றம் செய்துவிடுகின்றனர்.
இப்படி கட்டாயப்படுத்தி ஒருவரை மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்காகவே தமிழகத்தில் மதமாற்றத் தடைசட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழக மக்களின் நலனுக்காகத் தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
"பா.ஜ.கவுடன் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்பதால் தான் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தீர்களா?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "நன்றாக மிகைப்படுத்தப்பட்ட கேள்வி. ஆனால் இது சம்பந்தமில்லாதகேள்வி" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
காவிரி விவகாரம் தொடர்பான தமிழகத்தின் அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்தோ, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா குறித்தோ பேச ஜெயலலிதா மறுத்துவிட்டார்.