For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போனஸ் தராவிட்டால் ஸ்டிரைக்: பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கோவில்பட்டி:

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படாவிட்டால் ஸ்டிரைக்கில் இறங்குவோம்என்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்கப்பட வேண்டும். அதேபோல, கடந்த ஆண்டுபாக்கி போனஸ் தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தீபாவளிக்கு முன்பாகவே போக்குவரத்துக் கழக ஊழியர்கள்ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டி வரும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி மேற்கொள்ளும் ஸ்டிரைக்கில் போக்குவரத்துஊழியர்களும் கலந்து கொள்வர் என்றார் செளந்தரராஜன்.

கடந்த ஆண்டு போனஸ் தர தமிழக அரசு மறுத்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள் ஒரு மாதத்திற்கும்மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர் என்பதும் தீபாவளியன்று கூட சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர்என்பதும் நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X