"போலீஸ் அடித்ததால் தான் மாறன் உடல் நிலை மோசம்": கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
தன்னைக் கைது செய்த போது மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனை போலீஸார் கடுமையாகதாக்கியதால் தான் அவரது உடல் நிலை இப்போது மோசமாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அஇதுகுறித்து இன்ற அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மாறனின் உடல் நிலை சீரியஸாகவே உள்ளது. இதற்குக் காரணம் போலீஸார் தான்.
கடந்த ஆண்டு என்னைக் கைது செய்ய போலீஸார் வந்தபோது, அதைத் தடுத்ததால் மாறன் கடுமையாகதாக்கப்பட்டார்.
எனது வீட்டிலும், பின்னர் வேப்பேரி போலீஸ் நிலையத்திலும் வைத்து மாறனை போலீஸார் கடுமையாக தாக்கினர்.இதில் அவருக்கு ரத்தம் வந்தது.
இருதய பலவீனம் காரணமாக அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால்போலீஸாரின்கடுமையான தாக்குதலால் இந்தக் கருவி சேதமடைந்தது.
இதன் காரணமாகவே அவரது உடல் நிலை இப்போது மிகவும் மோசமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications