சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி
சென்னை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியுடன் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது. இதையடுத்துதமாகா தலைவராக இருந்த ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்த இளங்கோவன் செயல் தலைவராக மாற்றப்பட்டார். முன்னாள்தமாகாவைச் சேர்ந்த சோ. பாலகிருஷ்ணன் தமிழக காங்கிரஸின் தலைவரானார்.
இப்படி தமாகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வந்தது காங்கிரஸ்தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்தப் பதவியைஎப்படியாவது பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் (?) வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
தற்போது தலைவராக இருக்கும் யசோதா, தானே இப்பதவியில் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால் எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்தை தலைவராக நியமிக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
இளங்கோவனும் வாசன் கருத்தை ஆதரித்துள்ளார். காரணம், அவருக்கு யசோதாவை பிடிக்காது.
இந்த இரு பிரிவினரும் கடுமையாக மோதி வருவதால் வேறு யாரையாவது நியமிக்கலாமா என்றும் காங்கிரஸ்மேலிடம் யோசித்து வருகிறதாம்.
அனேகமாக பாரமலை என்ற எம்.எல்.ஏவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. முன்னாள் மத்தியஅமைச்சர் பிரபுவும் தன் பங்குக்கு சிலரது பெயர்களை பரிந்துரை செய்துள்ளார்களாம்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு நாளை சென்னையில் அகில இந்திய பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா தலைமையில் நடைபெறவுள்ளது. ஒருமனதாக தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.