தமிழை புறக்கணித்து விட்டு குடமுழுக்கா?- மதுரை ஆதீனம் ஆவேசம்
மயலாடுதுறை:
திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும், தமிழையும் புறக்கணித்து விட்டு கோவில்களில் குடமுழுக்கோ,வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிகபரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.
மயிலாடுதுறையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
அப்படியானால் கோவில்களிலும் தமிழ் தானே முதலிடம் வகிக்க வேண்டும்?
தமிழகத்தில் தமிழ் வழிபாடு வேண்டும் என்று விரும்புவோருக்கு தமிழில் அர்ச்சனைகள் செய்ய வேண்டியதுகோவில் பூசாரிகளின் கடமை. அதை அவர்கள் மீறக் கூடாது.
இதற்காக சமஸ்கிருதம் மீது வெறுப்போ, விரோதமோ, அதிருப்தியோ கிடையாது. சமஸ்கிருத மொழியில்அர்ச்சனை வேண்டாம் என்று கூறவில்லை.
ஆனால் தமிழ் மொழியிலும் அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும் புறக்கணிப்பதால் தான் தமிழும் புறக்கணிக்கப்படுகிறது.அவ்வாறு புறக்கணித்து விட்டு குடமுழுக்கோ, வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்மதுரை ஆதீனம்.
இதற்கிடையே தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தையும் மதுரை ஆதீனம்வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஏழை மக்களை சிலர் ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்கின்றனர். இதனால் மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டுவர வேண்டும் என்று கடந்த 1981ம் ஆண்டிலிருந்தே நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தற்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. இந்தச் சட்டத்தால் யாருக்கும்பாதிப்பு கிடையாது. எனவே அனைத்துக் கட்சிகளும் சட்டசபை உறுப்பினர்களும் இந்தச் சட்டத்தை ஒருமனதாகஏற்க வேண்டும்.
மற்ற மத அமைப்புகளும் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை எதிர்த்துகல்வி நிறுவனங்களை மூடிவிடுவோம் என்று சில அமைப்புகள் கூறியிருப்பது ஜனநாயக விரோதமானது.
இது தொடர்பான போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதும் மிகவும் தவறாகும் என்றார் மதுரை ஆதீனம்.