தமிழை புறக்கணித்து விட்டு குடமுழுக்கா?- மதுரை ஆதீனம் ஆவேசம்
மயலாடுதுறை:
திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும், தமிழையும் புறக்கணித்து விட்டு கோவில்களில் குடமுழுக்கோ,வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிகபரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.
மயிலாடுதுறையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
அப்படியானால் கோவில்களிலும் தமிழ் தானே முதலிடம் வகிக்க வேண்டும்?
தமிழகத்தில் தமிழ் வழிபாடு வேண்டும் என்று விரும்புவோருக்கு தமிழில் அர்ச்சனைகள் செய்ய வேண்டியதுகோவில் பூசாரிகளின் கடமை. அதை அவர்கள் மீறக் கூடாது.
இதற்காக சமஸ்கிருதம் மீது வெறுப்போ, விரோதமோ, அதிருப்தியோ கிடையாது. சமஸ்கிருத மொழியில்அர்ச்சனை வேண்டாம் என்று கூறவில்லை.
ஆனால் தமிழ் மொழியிலும் அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும் புறக்கணிப்பதால் தான் தமிழும் புறக்கணிக்கப்படுகிறது.அவ்வாறு புறக்கணித்து விட்டு குடமுழுக்கோ, வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்மதுரை ஆதீனம்.
இதற்கிடையே தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தையும் மதுரை ஆதீனம்வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஏழை மக்களை சிலர் ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்கின்றனர். இதனால் மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டுவர வேண்டும் என்று கடந்த 1981ம் ஆண்டிலிருந்தே நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தற்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. இந்தச் சட்டத்தால் யாருக்கும்பாதிப்பு கிடையாது. எனவே அனைத்துக் கட்சிகளும் சட்டசபை உறுப்பினர்களும் இந்தச் சட்டத்தை ஒருமனதாகஏற்க வேண்டும்.
மற்ற மத அமைப்புகளும் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை எதிர்த்துகல்வி நிறுவனங்களை மூடிவிடுவோம் என்று சில அமைப்புகள் கூறியிருப்பது ஜனநாயக விரோதமானது.
இது தொடர்பான போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதும் மிகவும் தவறாகும் என்றார் மதுரை ஆதீனம்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications