ஜெ. தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
சென்னை:
சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று காலை கூடிஆலோசனை நடத்தினர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில் சென்னை லாயிட்ஸ் சாலையில்உள்ள அதிமுக தலைமை நிலையத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூடினர்.
நாளை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதில் மேற்கொள்ள வேண்டியஅணுகுமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
சட்டசபையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு ஆவேசமாக நடந்து கொண்டாலும், அதிமுக எம்.எல்.ஏக்கள்அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே சென்னை-அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்களின்கூட்டமும், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் இன்று மாலை நடக்கிறது.












Click it and Unblock the Notifications