For Daily Alerts
Just In
காவிரி: விஜயகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம்
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து விஜயகாந்த் ரசிகர்கள் சென்னையில் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்கு உடனடியாக நீர்திறந்துவிட வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விஜயகாந்த் ரசிகர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை-வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று விஜயகாந்த்தலைமை ரசிகர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, October 23, 2002, 5:30 [IST]