திருச்சி: காவிரி வெள்ளத்தில் சிக்கி இளைஞர் சாவு
திருச்சி:
திருச்சி காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியானார்.
காவிரியில் நீர் இல்லாமல் திருச்சி காவிரி ஆறு கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்தது.
இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையில் அதிக அளவில் நீர் திறந்துவிடப்படுவதாலும் திருச்சி அகண்ட காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மக்கள் மனம் மகிழ்ந்து போயுள்ளனர். காவிரியின் அழகான நீரோட்டத்தைக் காண கரையோரப்பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அதுபோல காவிரி அழகைக் காண வந்த இளைஞர் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்துவிட்டார்.
வெள்ளத்தில் அடிக்கப்பட்டு சென்ற அவர் நிச்சயம் உயிரிழந்திருப்பார் என்றே தெரிகிறது. ஆனாலும் அவரதுஉடல் இதுவரை மீட்கப்படவில்லை.
அவரது பெயர் சரவணன் என்றும் 23 வயதான அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.